Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4 ஆவது ஒருநாள் போட்டி: விடிய விடிய காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (11:29 IST)
இம்மாதம் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
 
5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்காட்டில் நடைபெறவுள்ளது.
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆவது ஒருநாள் போட்டி இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 9 மணிக்கு தொடங்கியது. 750 ரூபாய் முதல் 7,500 வரை விற்கப்படும் டிக்கெட்டுகளை பெறுவதற்காக நேற்று இரவு 10 மணி முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து இந்த டிக்கெட் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments