Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான நிலையில் இந்தியா; இலங்கைக்கு 322 ரன்கள் இலக்கு

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (19:22 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இலங்கைக்கு எதிராக போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.


 


 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிறகு 321 ரன்கள் குவித்தது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ரோகித் சர்மா 79 பந்துகளில் 78 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யுவராஜ் சிங் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 
 
ஒருபக்கம் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் தவான் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த தோனி ரன் குவிப்பத்தில் கவனமாக இருந்தார். அரை சதம் கடந்த தோனி 52 பந்துகளில் 63 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
இதனிடையே தவான் சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 9 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் தோனியுடன் இணைந்து பொறுமையாக ஆடி வந்தார். கடைசி இரண்டு ஓவரில் அதிரடியாக அடித்து ஆடினார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 321 ரன்கள் குவித்தது.
 
அடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாட தொடங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments