இன்று உலகக் கோப்பையில் முதல் போட்டியை விளையாடும் இந்தியா… ப்ளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்?

vinoth
புதன், 5 ஜூன் 2024 (08:40 IST)
டி 20 உலகக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த எந்த வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் மைதானங்கள் பவுலிங்குக்கு ஏற்றவை என்பதுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்றிரவு இந்திய அணி அயர்லாந்தை தங்கள் முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இந்திய ப்ளேயிங் லெவன் அணி என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கோலி இறங்குவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

மூன்றாம் இடத்தில் ரிஷப் பண்ட்டைக் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இறங்க, ஐந்தாம் இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ஷிவம் துபே ஆகிய ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. ஆறு மற்றும் ஏழாவது இடங்களில் ஹர்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் இறங்க, அடுத்தடுத்த இடங்களில் குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments