ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 347/6

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (18:19 IST)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 347/6 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் (108) மற்றும் முரளி விஜய் (107) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். லோகேஷ் ராகுல் (54) அரை சதம் அடித்தார்.
 
இந்நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 78 ஓவர்களில் 6 வீக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. பாண்ட்யா 10 ரன்களுடனும், அஷ்வின் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்குமா? நடக்காதா? பாகிஸ்தான் பிரதமர் சொன்னது என்ன?

இந்தியாவுடன் டி20 உலக கோப்பை!.. பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு?..

இந்த 3 நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் இந்தியாவுடன் விளையாடுவோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில்

118 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா.. சூர்யகுமார் யாதவ் புண்ணியத்தில் வெற்றி..!

வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணியில் இடம்பெறாதது ஏன்? இந்த 2 காரணங்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments