Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (11:54 IST)
13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டித் தொடர் மொத்தம் 10 நகரங்களில் நடக்கிறது. அதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்  9 இடங்களில் நடக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் 5 நகரங்களில் மட்டுமே நடக்க உள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி விளையாடும் போட்டியை மும்பையில் நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் அரையிறுதி போட்டி மும்பையில் நடக்க உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்றால் அரையிறுதி போட்டி மும்பையில் நடக்காமல் கொல்கத்தாவிலேயே நடக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிப் போட்டியில் மோதினாலும் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் மட்டுமே நடக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments