Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதான தடையை நீக்கிய ஐசிசி!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (13:34 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர், இலங்கை அணியின் தொடர் தோல்வியால் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய கிரிக்கெட் குழுவை கலைத்துவிட்டு, ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவை  நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது தற்காலிக தடையை விதித்தது. இது சம்மந்தமான செய்திக் குறிப்பில் “இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் வாரிய  நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு  உறுதிப்படுத்த வேண்டும்'' எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் இப்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியுள்ளது ஐசிசி. இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments