க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

Prasanth Karthick
திங்கள், 24 மார்ச் 2025 (10:06 IST)

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டக் அவுட் ஆனதுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.

 

ஐபிஎல் வந்துவிட்டாலே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிகள்தான் அதில் டாப் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. ஜாம்பவான் அணிகளான இரு அணிகளுமே தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். இந்த ஆண்டு இரண்டு அணியில் யார் 6வது கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

 

ஆனால் மும்பை இந்தியன்ஸின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் டக் அவுட் சோகம் தொடர்ந்தபடியே உள்ளது. நேற்று நடந்த போட்டியிலும் 4 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

 

முன்னதாக நேற்றைய Great Rivalry போட்டிக்காக ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் சிஎஸ்கே பேரை சொன்னதும் ரோஹித் ஆத்திரத்தில் ஜூஸ் கிளாஸை கையாலேயே இறுக்கி உடைத்துவிடுவார். அப்படியெல்லாம் விளம்பரத்தில் பில்டப்பாக இருந்துவிட்டு போட்டியில் டக் அவுட் ஆகிவிட்டதை எதிர்தரப்பு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

மேலும் நேற்றைய டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 18 முறை டக் அவுட் ஆன ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை டக் அவுட் ஆன சாதனையை பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், க்ளென் மேக்ஸ்வெல் சாதனையை சமன் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments