Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அணியில் இருந்து நீக்கவில்லை… பிசிசிஐக்கு நன்றி- ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (09:08 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன.

அவரைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பார்க்கையில் அவர் தோனியிடம் இருந்து அதிகம் கற்று இருப்பார் என தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார். இதையடுத்து தற்போது இந்திய அணியில் ஹர்திக் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் வந்திருப்பது குறித்து பேசியுள்ள பாண்ட்யா “குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நான் என்ன செய்தேனோ அதையே இந்திய அணிக்கும் செய்ய உள்ளேன். எல்லோரும் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் நான்தான் நீண்ட நாள் ஓய்வில் இருந்தேன். என்னை ஓய்வில் இருக்க அனுமதித்த பிசிசிஐக்கு நன்றி. அவர்கள் என்னை மீண்டும் அணிக்குள் வர சொல்லி கேட்கவே இல்லை.” எனக் கூறியுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஹர்திக் காயங்களால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் பல போட்டிகளில் பந்துவீசாமல் பேட்டிங் மட்டும் செய்து வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments