Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி... பாத்து ஜாக்கிரதை: ரிஷப் பந்த்-ஐ எச்சரித்த கம்பீர்!

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (13:05 IST)
தோனிக்கு பின்னர் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக முன்நிறுத்தப்படும் ரிஷப் பந்த-ஐ எச்சரித்துள்ளார் கவுதம் கம்பீர். 
 
சிறந்த விக்கெட் கீப்பராக் திகழ்ந்த தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த்-ஐ இந்திய அணி நிர்வாகம் முன்னிறுத்துகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிக்கு ரிஷப் பந்த்-ஐ விக்கெட் கீப்பராக்க அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது. 
 
ரிஷப் பந்த் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர், ரிஷப் பந்த்-த்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளதாவது, 
ரிஷப் பந்த் எப்போதும் சிறப்பாக உற்சாகத்துடன் விளையாடக் கூடியவர். ஆனால், எனக்கு பிடித்தவரான சஞ்சு சாம்சன் அவருக்கு போட்டியாக பின்னால் நின்று கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சாம்சன் ரிஷப் பந்த்துக்கு மிகவும் சவாலாக திகழ்ந்து வருகிறார். எனவே ரிஷப் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments