Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதும் சாமி எனக் கும்பிட்டுவிட்டு கிளம்பும் கேரி கிரிஸ்டன்.. என்னதான் நடக்குது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்?

vinoth
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:44 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சொதப்பி வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி வாராவாரம் ஏதாவது மாற்றம் நடந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கான பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் ஜேஸன் கில்லஸ்பி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது… அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவை- அசாருதீன் கருத்து!

என்னால் திரும்ப விளையாட முடியுமா?... விபத்துக்குப் பின் பண்ட் கேட்ட முதல் கேள்வி- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

இங்கிலாந்து தொடர் முழுவதும் தோல்வி அடைந்தாலும்… கில்லுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments