Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பதவியிலிருந்து விலகிய கம்பீரின் அடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (15:30 IST)
டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கம்பீர், இனி வரும் ஆட்டங்களில் சம்பளம் வாங்காமலே விளையாட முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டி 11 வது சீசன் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கம்பீரை இந்த முறை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால், இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.
 
கம்பீர் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய 6 போட்டிகளில், 5 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தோல்விகளுக்கு பொறுப்பேற்ற கம்பீர், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஏலத்தில் 2.8 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட கம்பீர், இந்த சீசன் முழுவதும் சம்பளம் வாங்காமல் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments