Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வரை போராடிய ஜோ ரூட்… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்!

vinoth
சனி, 24 பிப்ரவரி 2024 (11:09 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிகெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்த்தார். இந்தியா சார்பாக ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 19 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments