செம போதை ஆகாதே.. சரக்கடித்து மயங்கி விழுந்த மேக்ஸ்வெல்! – ஆஸி கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு!

Prasanth Karthick
செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:21 IST)
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மதுபோதையில் மயங்கி விழுந்ததால் அவரை ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெலுக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் ஒரு இந்திய பெண்ணைதான் திருமணமும் செய்து கொண்டார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் அளவுக்கு அதிகமாக மதுவை அருந்தி நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் இவ்வாறு போதை தலைக்கேறி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பங்கேற்கு ஒருநாள் தொடரில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments