அடுத்த டெஸ்ட்டில் இடம் கிடைக்குமா?... கே எல் ராகுலுக்கே அது தெரிந்திருக்கும்- தினேஷ் கார்த்திக் கருத்து!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (15:28 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார். இதனால் அடுத்து நடக்கவுள்ள இந்தூர் டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என சொலல்ப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் “ராகுல் அடுத்த போட்டியில் நீக்கப்படப் போகிறார் என்றால், அது ஒரு இன்னிங்ஸால் அல்ல, கடந்த ஐந்து-ஆறு டெஸ்ட் போட்டிகளில் என்ன நடந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அவர் ஒரு கிளாஸ் பிளேயர். அவர் அனைத்து வடிவங்களிலும் மிகவும் திறமையானவர். இப்போது அவருக்கு விளையாட்டில் இருந்து சிறிது நேரம் தேவைப்படலாம். ஆஸி அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு புத்துணர்வோடு வரலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments