Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து சூசகமாக பதிலளித்த தோனி…!

vinoth
திங்கள், 28 அக்டோபர் 2024 (07:31 IST)
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் தான் தூதுவராக இருக்கும் சாப்ட்வேர் ஒன்றின் அறிமுக நிகழ்வில் தோனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “43 வயதாகும் என்னால் இன்னும் ஐபிஎல் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என தோன்றுகிறது. கடந்த 9 மாதங்களாக நான் ஃபிட்டாக இருந்து வருகிறேன். அதனால் இரண்டரை மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது எனக்குக் கடினமானது இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments