தோனி, துபே சூப்பர் டக் அவுட்.. சிஎஸ்கே வைத்த சொற்ப இலக்கு! – சேஸிங்கில் இறங்கும் பஞ்சாப்!

Prasanth Karthick
ஞாயிறு, 5 மே 2024 (17:31 IST)
ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் போட்டியிட்டு வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி சொற்ப ரன்களையே டார்கெட்டாக வைத்துள்ளது.



டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை எடுக்க பேட்டிங்கில் இறங்கிய சிஎஸ்கேவில் ஆரம்பமே ரஹானே 9 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் 32 ரன்களும், டேரில் மிட்செல் 30 ரன்களும் அடித்து ஒருவாறு ஆட்டத்தை கொண்டு போக முயன்றபோது கெயிக்வாட் விக்கெட் விழுந்தது. அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் டக் அவுட் ஆனார்.

ஜடேஜா மட்டும் நின்று விளையாடி 43 ரன்கள் வரை சேர்த்து அவுட் ஆனார். ஆனால் அவருக்கு முன்பே வரிசையாக ஒவ்வொருவராக விக்கெட் இழந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். 18.5ல் களமிறங்கிய தோனி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் டக் அவுட் ஆனார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 167 மட்டுமே எடுத்துள்ளது. தற்போது சிஎஸ்கேவில் பதிரனா, முஸ்தபிசுரும் பந்துவீச்சில் இல்லாததால் பஞ்சாபின் ரன்களை எப்படி கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலே ஒழிய இன்று வெற்றிக்கான அதிர்ஷ்டம் பஞ்சாப் அணிக்கு அதிகமாகவே உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments