Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சென்னை அணி தடைக்கு எதிரான மனு தள்ளுபடி

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (15:24 IST)
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்-லில் விளையாட தடைவிதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தனர்.


 
 
2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  சென்னை, ராஜஸ்தான் அணிக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீரர்களும் ஏலம் விடப்பட்டனர்.
 
இந்நிலையில் சென்னை அணியின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தனர்.
 
இன்று இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments