Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரில் யார் சிறந்த கேப்டன்… பும்ரா அளித்த பதில்!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (16:42 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக வரலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகிய மூவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “என்னை பொறுத்தவரை நான்தான் சிறந்த கேப்டன். பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருந்தாலும் எனக்கு நான்தான் பேவரைட். தோனியின் கீழ் விளையாடிய போது பாதுகாப்பாக உணர்ந்தேன்.  கோலியின் கீழ் விளையாடிய போது ஃபிட்னெஸ்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ரோஹித் ஷர்மா வித்தியாசமானவர். அவர் வீரர்களின் மனதில் உள்ளதைப் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments