தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு குடுத்தா ஜெயிக்கலாம்! – சிஎஸ்கேவுக்கு பிராட் ஹாக் அட்வைஸ்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:53 IST)
தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் மீண்டும் பழைய பலத்தை பெற சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளார் ஆஸ்திரேலியா முன்னாள் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.

இதுகுறித்து தனது யூட்யூப் சேனலில் பேசியுள்ள அவர் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கர்ரனை பின்வரிசையில் நிறுத்தாமல் மூன்றாவது பேட்ஸ்மேனாக நிறுத்த வேண்டும். இடது கை பேட்ஸ்மேனான அவர் பல டி20 போட்டிகளில் மூன்றாவது பொசிஷனில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதுபோல பந்து வீச்சில் பிராவோவுக்கு பதிலாக இம்ரான் தாஹிரை அணிக்குள் கொண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் காண முடியும். மேலும் தமிழக வீரர் ஜகதீசனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கும் நிலையில் இனி வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி தனது மொத்த பலத்தையும் நிரூபிக்க வேண்டிய சூழல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments