Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!

vinoth
வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:21 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கப் போகிறது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் உலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பிசிசிஐ ஒரு புதிய விதியை (2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த விதிதான்) அமல்படுத்த உள்ளதாகவும் அதை அமல்படுத்தினால்தான் தோனி சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டு ஆனவர்களை ‘அன்கேப்ட்’ (அதாவது உள்ளூர் வீரர்) வீரராக அறிவிக்க உள்ளதாகவும், அப்படி அறிவித்தால் தோனியை சிஎஸ்கே அனி “அன்கேப்ட் பிளேயர்” பிரிவில் தக்கவைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிசிசிஐ இதுகுறித்து அறிவிக்கவுள்ளதாகவும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கவுள்ளதாகவும் ஆனால் RTM எனும் விதி இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. RTM விதிப்படி தங்கள் அணியில் இருந்த ஒரு வீரரை மற்றொரு அணி ஏலத்தில் எடுக்கும் போது அந்த அணி அதே விலைக்கு அந்த வீரரை எடுத்துக் கொள்ள முடிவு செய்தால், அந்த அணிக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் விதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments