Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் காதலிகளை அழைத்து செல்ல தடை: கிரிக்கெட் வாரியம்

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2014 (12:23 IST)
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பங்குபெறும்போது, வீரர்கள் தங்கள் காதலிகளை அழைத்து செல்ல தடைவிதித்துள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம்.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 10 ஆம் தேதியுடன் முடிகிறது.
 
பின் 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடக்கவுள்ளது.
பின்னர் உலக கோப்பை போட்டிகள் பிப்ரவரி முதல் மார்ச் வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. எனவே 4 மாதங்கள் வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருப்பதால், இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. 
 
எனினும் வீரர்களின் காதலிக்கு, கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இளம் வீரர் வீராட் கோலி தன் காதலி அனுஷ்கா சர்மாவை அழைத்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments