Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி வாய்ப்ப பத்தி இப்போ பேசமுடியாது.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (07:00 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய தென் ஆப்பிரிக்கா பரபரப்பான திரில் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் பலவீனமாகியுள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் “நாங்கள் களத்தில் மிகச்சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். போட்டியில் டி ஆர் எஸ் முறையும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியாக நாங்கள் அப்பீல் செய்த விக்கெட்டுக்கு நடுவர் விக்கெட் கொடுத்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும். இப்போதைக்கு நாங்கள் அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியாது. அடுத்த மூன்று போட்டிகளையும் வென்ற பிறகு பிற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments