Webdunia - Bharat's app for daily news and videos

Install App

369 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்… இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி தடுமாற்றம்!

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (07:16 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.

ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள்  ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை பாலோ ஆன் தவிர்க்க வைத்து 369 ரன்கள் சேர்க்க வைத்தனர். சிறப்பாக ஆடிய நிதீஷ் குமார் 114 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. 53 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆஸி அணியை எவ்வளவு குறைந்த ரன்களுக்குள் சுருட்ட முடிகிறதோ அந்தளவுக்கு அது இந்திய அணிக்கு வெற்றியைப் பெற உதவும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் காலத்தில் பும்ரா இல்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது… இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு!

கம்பீரின் ஓய்வறைப் பேச்சுகளைக் கசியவிட்டாரா சர்பராஸ் கான்… கிளம்பிய சர்ச்சை!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி.. அட்டவணையை அறிவித்த பிசிசிஐ..!

கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகள்.. பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

ரோஹித் ஷர்மா செய்ததைப் போல யார் செய்வார்கள்… ஆதரவு கொடுத்த யுவ்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments