Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயார் உடல்நிலை காரணமாக ராஜ்கோட் டெஸ்ட்டில் இருந்து அஸ்வின் விலகல்… !

vinoth
சனி, 17 பிப்ரவரி 2024 (08:17 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 225 ரன்கள் சேர்த்துள்ளது.

நேற்று இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஸாக் க்ராவ்லி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் 500 ஆவது விக்கெட்டாகும். இந்திய அணியில் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை இதன் மூலம் அஸ்வின் படைத்தார்.

இந்நிலையில் தற்போது அவருடைய தாயார் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பார்க்க அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை கிளம்பியுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments