Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் என் கடைசி ஐபிஎல்… அம்பாத்தி ராயுடு டிவீட்… உடனடியாக நீக்கம்!

Webdunia
சனி, 14 மே 2022 (16:48 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அம்பாத்தி ராயுடு தற்போது வெளியிட்டுள்ள டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மிக மோசமாக விளையாடி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு இந்த அணியில் யார் யாரெல்லாம் தொடர்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சென்னை அணியில் பல வீரர்கள் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.

இந்நிலையில் தற்போது அம்பாத்தி ராயுடு இன்று பகிர்ந்த ட்வீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் “ நான் இதுதான் என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு மிகப்பெரிய அணிகளில் எனது ஐபிஎல் கேரியரில் விளையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சி எஸ் கே மற்று மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார். ஆனால் இந்த டிவீட்டை அவர் உடனடியாக நீக்கியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments