Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலி..

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (20:00 IST)
கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,700 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் இத்தாலி நாட்டில் 11 பேரும், ஈரான் நாட்டில் 15 பேரும், தென் கொரியா நாட்டில் 11 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொரோனா பாதிப்பால் 60 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் பிரான்சில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments