Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 27ல் இந்தியா- பிரான்ஸ் ராணுவ கூட்டுப்பயிற்சி

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (17:12 IST)
இந்தியா- பிரான்ஸ் கடற்படைகளின் 'வருணா' கூட்டு ராணுவப் பயிற்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கடற்படைகளில் ஒன்றிணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளின் கடற்படைகளை பலப்படுத்தும் வகையிலும், நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சிகள் ந டத்தப்பட ுகின்றன.

ஆண்டுதோறும், இந்த ராணுவப் பயிற்சி இந்திய கடற்பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக பிரான்சில் உள்ள பிரிட்டானியா கடல் பகுதியில் பயிற்சி நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி தொடங்கும் இந்த பயிற்சி ஜூலை 4ம் தேதி வரை நடைபெறும்.

இந்த பயிற்சியில் இந்திய தரப்பில், ராணுவ தளவாடங்கள், ஆதித்யா கப்பல் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. பிரான்ஸ் தரப்பிலும், கடற்படை கப்பல்கள் மற்றும் கடற்படைக்கு சொந்தமான நவீன ஹெலிகாப்டர்கள் இடம்பெறுகின்றன.

கடந்த 2006ம் ஆண்டில் இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் அதிபர் ஆகியோர் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இருநாட்டு கடற்படைகளும் இணைந்து பல்வேறு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சோமாலியா கடற்கொள்ளையர்களை அழிப்பதிலும் இரு நாட்டு கடற்படைகளும் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டுள்ளன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments