ராஜமௌலியைவிட அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்துக்குதான் பாலிவுட்டில் அதிக வரவேற்பும், டிமாண்டும். அவர் கதை எழுதிய பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் இரண்டும் சூப்பர்ஹிட்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பை சென்ற விஜயேந்திர பிரசாத் சல்மானை சந்தித்து கதை கூறியிருக்கிறார். கதை சல்மானுக்கு ரொம்பவே பிடித்துள்ளது. பஜ்ரங்கி பைஜான்ன் போலவே இதுவும் மனிதத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. ஆனால், பாகிஸ்தான், இந்தியா பிரச்சனை கிடையாது என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்தார்.
இந்தக் கதையை கபீர் கான் இயக்கவில்லை. வேறு யார் என்பதை சல்மான் கான் முடிவு செய்வார்.