Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெல்வெட் குற்றங்களில் மையல் கொண்டுள்ள பிரபுதேவா

Webdunia
புதன், 28 ஜனவரி 2015 (15:12 IST)
பிரபுதேவா கடைசியாக இந்தியில் இயக்கிய ரா...ராஜ்குமார் தோல்விப் படமாகவும், ஆக்ஷன் ஜாக்சன் மோசமான தோல்விப் படமாகவும் அமைந்தது. அதனால் அவர் மீண்டும் வான்டட், ரவுடி ரத்தோர் போல தெலுங்குப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் என பேச்சு அடிப்பட்டது.
இந்நிலையில் க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் வெல்வெட் குற்றங்கள் நாவலை பிரபுதேவா படமாக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெல்வெட் குற்றங்கள் விமானக் கடத்தலை மையப்படுத்திய கதை. சமீபமாக விமானங்கள் மாயமாவதும், விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து வருவதால் இந்தக் கதையை பிரபுதேவா விரும்புவதாக கூறப்படுகிறது. நாவலை படமாக்குவது குறித்து அவர் ராஜேஷ் குமாருடன் பேசியதாகவும் தகவல்.
 
அடுத்து இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து சிங் இஸ் பிளிங் படத்தை பிரபுதேவா இயக்குவது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments