Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோயில் இருந்து மீண்ட இர்ஃபான் கான் – நடிகர்களுக்கு உருக்கமான நன்றி !

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:12 IST)
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோய் சிகிச்சை முடிந்த பின்னர் தனக்காக பிராத்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாக்கள் மற்றும் ஹாலிவுட் சினிமா என இரண்டுத்துறைகளிலும் வெற்றிகரமாக நடித்துவந்த நடிகர் இம்ரான் கான் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு லண்டனில் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த செய்தி வெளியானதும் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பிராத்தனைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக நடந்துவந்த சிகிச்சை முடிந்து அவர் இப்போது நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்நிலையில் தனக்குத் துணை நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டரில் ‘வெற்றியை நோக்கி செல்வதில் நாம் நேசிக்கப்படுவதை மறந்து விடுகிறோம். சோதனை காலங்களில் இது நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. எனது தடங்களை இந்த வாழ்க்கையில் விட்டுச் செல்வதற்கு முன் உங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதுவே என்னை குணமடையத் தூண்டியது. நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வந்து இருக்கிறேன். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments