Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் என்ற நினைப்பில் அலப்பரை செய்யும் நடிகை; ஹீரோ குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (16:33 IST)
நடிகை அவந்திகா ஷெட்டிக்கு தான் ஐஸ்வர்யா ராய் என்ற நினைப்பு. ஐஸ்வர்யா ராய் கூட இப்படி சீன் போட மாட்டார். இவர் அலப்பரை தாங்க முடியவில்லை என கன்னட நடிகர் குருநந்தன் தெரிவித்துள்ளார்.


 

 
கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி ராஜா கன்னடா மீடியம் எனற படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் மீது பாலியல் புகார் அளித்தார். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்படத்தின் நாயகன் குருநந்தன், அவந்திகா மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தயாரிப்பாளர் சுரேஷ் ஒரு ஜெண்டில்மேன். அவர் படக்குழுவை தனது குடும்பத்தார் போன்று பார்த்துக் கொள்கிறார். அவந்திகா மீதுதான் தவறு உள்ளது. ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்த அவந்திகா நாட்கள் செல்ல செல்ல அவரது அலப்பரை அதிகமாகிவிட்டது.
 
சரியான நேரத்தில் ஷூட்டிங் வரமட்டார். ஒருமுறை மும்பை சென்று அங்கேயே 20 நாட்கள் தங்கிவிட்டார். இதனால் படப்படிப்பு பாதிக்கப்பட்டது. அவந்திகா படக்குழுவினரிடம் பேச மாட்டார். அவருக்கு தான் ஐஸ்வர்யா ராய் என நினைப்பு. ஐஸ்வர்யா ராய் கூட இப்படி சீன் போட மாட்டார், என்றார் குருநந்தன்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்