Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தல் கும்பலிடம் சிக்கிய பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (17:35 IST)
பணம் கேட்டு பிரபல நடிகை அர்ச்சனா கவுதம் காரில் 4 பேர் கொண்ட கும்பலால் கைது செய்யப்பட்டார்.


 

 
மும்பை கோரோகவன் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா கவுதம்(22) அண்மையில் ஃபேஸ்புக் மூலம் அனிருத் என்பவருடன் பழகியுள்ளார். ஆனால் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை. 
 
இந்நிலையில் சேலை விளம்பரத்தில் நடிக்க விருப்பமா என அனிருத் அர்ச்சனாவிடம் கேட்டுள்ளார். விளம்பரத்தில் நடிக்க முன்பணமாக 50,000 ரூபாய் தொகை தருவதாக கூறியுள்ளார்.
 
அர்ச்சனா இதற்கு சம்மதம் தெரிவித்தார். இது தொடர்பாக கிளையன்டை பார்க்க ஜுஹு செல்லுமாறு கூறியுள்ளார். ஜுஹு சென்ற அர்ச்சனா கிளையண்டை சந்திக்க அவர்களது காரில் ஏறியுள்ளார். கார் இருந்த 4 பேர் சிறிது நேரம் விளம்பரம் குறித்து பேசிவிட்டு பின்னர் தாங்கள் சிபிஐ என்றும், விபச்சார வழக்கில் அர்ச்சனாவை கைது செய்வதாகவும் கூறியுள்ளனர்.
 
அவர்கள் சிபிஐ இல்லை தெரிந்துக்கொண்ட அர்ச்சனா காரில் இருந்து தப்ப முயற்சித்துள்ளார். அவர்கள் அர்ச்சனாவை விடாமல் ரூ.1 லட்சம் கேட்டு விட்டு போன் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து அர்ச்சனா தனது சகோதரருக்கு போன் செய்து ரூ.50,000 ஆயிரம் எடுத்து வர கூறியுள்ளார்.
 
அர்ச்சனா தனது சந்திப்பதாக கூறி காரில் இருந்து இறங்கி தப்பியுள்ளார். அங்கு பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறி தப்ப முயற்சித்துள்ளார். சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்கிக் கொண்ட அவரை 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் அர்ச்சனாவை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்துள்ளான்.
 
இதையடுத்து அர்ச்சனா சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அந்த நபரை அடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் கைது செய்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments