மியான்மர் சிறையில் இருந்து ராய்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவர் விடுதலை

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (19:33 IST)
மியான்மரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களான வா லோன் மற்றும் யாவ் சோ ஓ இருவரும் அதிபரின் பொது மன்னிப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அலுவல் ரகசிய சட்டத்தை மீறியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
 
2017ம் ஆண்டு நடத்திய ராணுவ நடவடிக்கையின்போது 10 முஸ்லிம் ரோஹிஞ்சாக்களை மியான்மர் பாதுகாப்பு படைப்பிரிவுகள் கொலை செய்ததாக செய்தி வெளியிட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
அவர்களை சிறையில் அடைத்தது கடும் கண்டனத்திற்கு உள்ளானதுடன், மியான்மரின் ஊடக சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கின்ற செயல்பாடு என்று கூறப்பட்டது.
 
மியான்மரின் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பிற கைதிகளோடு இந்த இரு பத்திரிகையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
"தான் பத்திரிகையாளராக பணிபுரிவதை நிறுத்த போவதில்லை" என்று சிறையை விட்டு யங்கூனின் புறநகருக்கு புறப்படுகையில் வா லோன் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments