Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்குட்டி வைத்திருந்த முன்னாள் நீதிபதிபதிக்கு மீண்டும் சிக்கல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (12:36 IST)
யானைக்குட்டி விவகாரத்தில் சிக்கியுள்ள நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

 
அண்மையில், முறையான அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டி ஒன்றை தன் வசம் வைத்திருந்த விவகாரத்தில் கொழும்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி திலின கமகேவை பிணையின் கீழ் விடுதலை செய்வதற்கு நுகேகொட மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இந்த பிணை உத்தரவு சட்ட விரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
தொடர்ந்து, தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, திலின கமகேவை பிணையின் கீழ் விடுதலை செய்த நுகேகொட மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
 
மேலும், முன்னாள் நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் சம்பந்தமாக, எதிர்வரும் 22 தேதி விசாரிக்கப்படும் என கூறிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, பின்னர் அது தொடர்பாக தீர்ப்பு ஒன்று வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments