Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (09:16 IST)
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் ரூபாய் 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதுள்ளதாக 'தி ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த பங்களிப்பில் 43,964 கோடி ரூபாய் பணமாகவும், சுமார் 1.2 லட்சம் கோடி பணம் சாராத பங்களிப்பாகவும் வழங்கப்படுகிறது. பணம் சாராத பங்களிப்பில் ரூ.44,993 கோடி ரூபாய் மதிப்புள்ள 4G அலைக்கற்றை ஒதுக்கீடும் அடக்கம்.

பாரத்நெட் என்ற லட்சியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பாரத் பிராண்ட் பேண்ட் நெட்வொர்க் (பி.பி.என்.எல்.) நிறுவனத்தை பி.எஸ்.என்.எல்லுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.

இது தொடர்பான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில் இந்த தொகையின் ஒரு பகுதியை முதலீடாக பி.எஸ்.என்.எல்.லுக்கு மத்திய அரசு வழங்கும் எனவும், இதனைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்ளும். மற்றொரு பகுதி நிதியின் மூலமாக இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் என தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையசேவை வழங்கவும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இந்த நிதி பயன்படும் என தெரிவித்ததாக தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments