Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன்: இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (23:28 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
 
தாய்லாந்து ஓபன் - 2022 மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில், அரையிறுதிக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி சிந்து, உலக சாம்பியனான ஜப்பானின் அகேனே யமாகுச்சியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
 
இந்த காலிறுதிப் போட்டியில், 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனையை தோற்கடித்தார். கடந்த மாதம் நடைபெற்ற ஆசியா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் யமகுச்சியிடம் இந்திய வீராங்கனை தோல்வியடைந்தார்.
 
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 7ம் நிலை வீராங்கனையான சிந்து, உலகின் 4ம் நிலை வீராங்கனை, டோக்கியோ 2020 சாம்பியனான சீனாவின் சென் யூ ஃபீயை எதிர்கொள்கிறார்.
 
தாய்லாந்து ஓபனில் களத்தில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. சாய்னா நேவால், எச்.எஸ் பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே வெளியேறி விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments