Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொலை செய்து ஃபேஸ்புக்கில் பிரசுரித்தவருக்கு தண்டனை

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (18:35 IST)
தனது மனைவியை சுட்டுக் கொலைசெய்து அவரது சடலத்தின் படத்தை ஃபேஸ் புக்கில் பிரசுரித்ததற்காக ஒருவருக்கு அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று கொலைக் குற்றத்திற்கான தண்டனை விதித்துள்ளது.


 
 
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக டெரிக் மெடினா முன்வைத்த வாதத்தை ஃபுளோரிடாவில் உள்ள ஜூரி நிராகரித்தது.
 
கொலை செய்ததற்காக தனக்கு சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் அந்த சமுகவலைதளத்தில் எழுதியிருந்தார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
தங்கள் மகள் கொல்லப்பட்டு அவரது உடல் இணையத்தில் கணவனின் கோபத்திற்குக் கிடைத்த ஒரு கொடூரமான வேட்டைப் பரிசு போல காட்சிப் பொருளாக்கப்படுவது இனி ஒருபோது நடக்கக்கூடாது என்று அரச வழக்கறிஞர்கள் கூறினர்.
 
அவருக்கான தண்டனை ஜனவரியில் நிறைவேற்றப்பட உள்ளது.

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments