Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அரசின் மக்கள் வங்கி - கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்தது சீனா

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (00:09 IST)
உரம் இறக்கமதியில் எழுந்த பிரச்சினையால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.Image caption: உரம் இறக்கமதியில் எழுந்த பிரச்சினையால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.
 
இலங்கை அரசின் மக்கள் வங்கியை, கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
மக்கள் வங்கியை கடந்த அக்டோபர் மாதம் கறுப்பு பட்டியலில் இணைக்க கொழும்பிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே, மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.சீனா நிறுவனத்திற்கும், இலங்கையில் உரத்தை இறக்குமதி செய்த தரப்பினருக்கும் இடையிலான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடந்த 7ம் தேதி மக்கள் வங்கி செலுத்தியது.
 
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு நாள் முன்பாக இந்த தொகை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்த பின்னணியில், மக்கள் வங்கி மீதான தடையை சீனா தளர்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments