Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் மத நிந்தனை வதந்தியை அடுத்த வன்முறையில் மூவர் பலி

Webdunia
திங்கள், 28 ஜூலை 2014 (17:51 IST)
பாகிஸ்தானில், பேஸ்புக் தளத்தில் மத நிந்தனை செய்யும் வண்ணம் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டதாக வந்த வதந்திகளை அடுத்து, பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதில், ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்று போலிசார் கூறுகின்றனர்.
 
சினமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்தச் செயலைச் செய்ததாக போலிசார் கூறினர்.
 
பலியானவர்கள் சிறுபான்மை இஸ்லாமியக் குழுவான அஹ்மதி குழுவைச் சேர்ந்தவர்கள் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்தச் சம்பவம், பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா என்ற நகரில் நடந்தது.
 
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இதே மாகாணத்தில் ஒரு கிராமத்தில், போலிஸ் நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த ஒரு பதின்பருவ இளைஞன், மத நிந்தனைக் குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வந்த ஒரு அஹ்மதி பிரிவு நபரைச் சுட்டுக் கொன்றான்.
 
அஹ்மதி இனத்தைச் சேர்ந்த மக்கள் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தானால் 1974இல் அறிவிக்கப்பட்டனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments