Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் பெண் ஊதிய முரண்பாடுகள் தவறு-போப் பிரான்சிஸ்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:52 IST)
ஒரே பணியை செய்யும் ஆடவர் மற்றும் மகளிர், ஒரே அளவு ஊதியம் பெற வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
 
அவ்வகையில் பணி ஒன்றாக இருக்கும்போது ஊதியங்கள் வித்தியாசமாக இருப்பது, ஒரு பெரிய ஊழல் என்றும் அதை கிறிஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும் என்றும், ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆற்றிய ஒரு உரையில் போப் கூறியுள்ளார்.
 
ஆடவருக்கு உரிய அனைத்து உரிமைகளும் மகளிருக்கும் உள்ளன என்று இருக்கும்போது, ஊதிய விஷயத்தில் அவர்களிடையே இடைவெளி இருக்க வேண்டிய காரணம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பெண்களை வெளியே சென்று வேலை பார்க்க வேண்டாம் எனத் தடுக்கும் ஆடவர்களையும் கடுமையாக சாடியுள்ள போப் பிரான்சிஸ், அப்படியானவர்கள் ஒரு வகையான ஆணாதிக்க சிந்தனையில் உள்ளவர்கள் எனக் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments