Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள்

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (10:42 IST)

கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியை நடத்தினர்.

சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றதாக கருதப்படும் இந்த பேரணியின்போது, கேட்டலன் கொடியை ஏந்திக்கொண்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு ஆதரவான முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

ஸ்பெனிலிருந்து கேட்டலோனியாவை பிரித்து தனி நாடாக்கும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் நடத்தப்பட்டு, தோல்வியடைந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, அந்த கோரிக்கையை முன்னெடுத்த தலைவர்கள் மீதான விசாரணை மாட்ரிட் நகரத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பிரிவினைவாத தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சிலர் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.

ஸ்பெயின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கேட்டலன் பிரிவினைவாதிகள் சமீபத்தில் விலக்கிக்கொண்டதால், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments