Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக சத்தத்துடன் இசை கேட்டால் செவித் திறன் பாதிக்கும்

Webdunia
புதன், 4 மார்ச் 2015 (11:05 IST)
ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இசையை கேட்பதை தவிர்ககுமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
 
இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
 
ஆடியோ பிளேயர்கள், இசைநிகழ்ச்சிகள் மற்றும் மதுபானசாலைகள் என்பனவும் கூட கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.
 
12 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 43 மில்லியன் பேர் கேட்கும் திறனை இழக்கும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
 
பணக்கார மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள இந்த வயது கட்டமைப்பிற்குள் உள்ளவர்களில் 50 வீதமானோர் தமது தனிப்பட்ட ஆடியோ சாதனங்களில் பாதுகாப்பற்ற அளவுகளில் சத்தத்தை கேட்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
 
பதின்ம வயதினரின் கேட்கும் திறன் குறித்து ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 1994 இல் 3.4 வீதமானவர்கள் கேட்கும் திறனை இழந்திருந்ததுடன் அது 2006 இல5.3 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.
 
இசையை கேட்கும் போது ஒரு மணித்தியாலத்திற்கு குறைந்த நேரம் கேட்பதுடன் ஒலி அளவை குறைத்துக் கேட்டால் சத்தத்தால் செவிப்புலனுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என்பதே இந்த ஆய்வின் சாராம்சமாக உள்ளது.

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

Show comments