Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணித்த இந்தோனேசிய அதிபர்

Webdunia
சனி, 22 நவம்பர் 2014 (19:49 IST)
இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜொக்கோ விடோடோ (Joko Widodo), தனது மகனின் பட்டமளிப்பு விழாவுக்காகச் சிங்கப்பூருக்குச் செல்வதற்கு விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணம் செய்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
தனது சொந்தத் தேவைக்கான பயணம் என்பதால், தனது தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல், பொது விமானத்தில் பயணித்துள்ள இந்தோனேசியாவின் புதிய அதிபர் தனது சொந்தப் பணத்திலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
எனினும், அவருடன் பாதுகாப்புக்காக சென்ற 7 காவலர்களின் செலவும் அரசினால் செலுத்தப்பட்டுள்ளது.
 
புதிய அதிபரின் இந்தச் செயற்பாடு, சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.
 
நல்லதொரு முன்னுதாரணம் என்று அவரைச் சிலர் புகழ்ந்துள்ளனர்.
 
ஆனால் மேலும் சிலரோ, மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவர் போடும் நாடகம் என்று கூறியுள்ளனர்.
 
இதே வேளை, அதிபர் விடோடோ, சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகுபவர் என்று பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments