இந்தியர்கள் உடலில் சர்க்கரை நோய் ஆபத்தை அதிகரிக்கும் ஜீன்: கண்டுபிடித்த சென்னை ஐஐடி!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:19 IST)
15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
பலதுறை, பல கல்வி நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க நீரிழிவு சங்கம் வெளியிடும் டயபட்டீஸ் என்ற சஞ்சிகையில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதப் பதிப்பில் அட்டைப்படக் கட்டுரையாக இதனை வெளியிடவுள்ளது என்றும் 'தி ஹிந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சென்னை ஐ.ஐ.டி.யின் பூபத் அன்ட் ஜோதி மேத்தா ஸ்கூல் ஆஃப் பயோ சயன்சஸ் மையத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் நிதீஷ் ஆர்.மகாபத்ரா இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தினார்.
 
இதய மற்றும் வளர்சிதை நோய்களுக்குக் காரணமாகும் முக்கிய மரபணு இடர்ப்பாட்டுக் காரணியை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளதாக மகாபத்ரா கூறினார்.
 
இந்த ஜீன் திரிபை சுமக்கும் நபர்களுக்கு ஏற்படும் கூடுதல் இடர்பாட்டுக்கான மூலக்கூறு அடிப்படைகளையும் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறும் இவர், இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்று அவர் கூறினார் என்கிறது தி ஹிந்து செய்தி.
 
"இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும்" என்று அவர் கூறினார் என்கிறது அந்த செய்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments