Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிசயம்... ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள்

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2014 (06:49 IST)
சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 



இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன.
 
பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தப் பாண்டாக் குட்டிகள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
இதனிடையே, பிரிட்டனின் எடின்பரோ மிருகக்காட்சி சாலையில் இப்போது இருக்கும், டியான் டியான் எனும் பாண்டா கர்ப்பமாக உள்ளது என்று தாங்கள் கருதுவதாகக் கூறும் அதன் பராமரிப்பாளர்கள், இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் அது பிரசவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
சீனாவின் தென் மேற்கு காட்டுப் பகுதிகளில் சுமார் 1600 பாண்டாக்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றன.
 
பாண்டாக்களின் இனவிருத்தி வீதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments