Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம்: "பிரதமரின் வானொலி நிகழ்ச்சியின்போது மணியோசை எழுப்புங்கள்"

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (13:23 IST)
தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது.
 
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 26ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 11 விவசாயிகள் தினமும் உண்ணாவிரதம் இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களை டிசம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரப் போவதாகத் தெரிவித்தனர்.
 
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர், டிசம்பர் 27ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது வீடுகளில் ஒவ்வொருவரும் மணியோசை எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.
 
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments