Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேரியோபோல் ஆலையில் சிக்கிய யுக்ரேன் படையினர் வெளியேற்றம்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:34 IST)
யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.


படுகாயமடைந்த 53 வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த நோவாசோவ்ஸ்க் நகருக்குக் அழைத்துச் செல்லப்பட்டதாக யுக்ரேன் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஹன்னா மாலியார் தெரிவித்தார்.

மேலும், 211 வீரர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த ஒலெனிவ்கா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.

அஸவ்ஸ்டால் ஆலையில் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற இருநாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் உருவாகியிருப்பதாக, ரஷ்யா முன்னதாக தெரிவித்திருந்தது.

டஜன் கணக்கிலான பேருந்துகள் மூலம் யுக்ரேன் படையினர் அந்த ஆலையிலிருந்து திங்கள்கிழமை மாலை வெளியேற்றப்பட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதேபோல, யுக்ரேன் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படும் வீடியோக்களை ரஷ்ய அரசு ஊடகமும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 லட்சம் செலவில் Tower Clock.. கடிகாரம் ஓடல.. சரிசெய்ய வழியும் இல்ல! - கலாய் வாங்கிய பீகார் ஸ்மார்ட்சிட்டி!

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments