Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கம் பவானிபூரில் செப்டம்பர் 30 இடைத் தேர்தல் - மம்தா போட்டி

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (15:09 IST)
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சனிக்கிழமை அறிவிப்பு. 
 
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சனிக்கிழமை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தமது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரியிடம் நூலிழையில் தோற்றுப் போனார்.
 
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத மம்தா பானர்ஜி தமது முதல்வர் பதவியில் தொடரவேண்டுமானால் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்லவேண்டும். எனவே, அவர் பவானிபூரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். பவானிபூர் தவிர மேற்கு வங்கத்திலேயே சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் ஒடிஷாவில் பிப்லி தொகுதியிலும் செப்டம்பர் 30-ம் தேதியே இடைத் தேர்தல் நடக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments