இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை தடை செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (18:36 IST)
இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு நாட்டில் உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


 
நாகரீகம் மற்றும் ஸ்டைல் அடையாளமாக கருதப்படும் இ-சிகரெட் பயன்பட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதால் இந்த தடை விதிக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
மாணவர்கள் இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த மத்திய அமைச்சர், இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் என இது தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
 
இ-சிகரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இ-சிகிரெட்டின் உள்ளே நிகோடின் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.


 
இளைஞர்கள் மற்றும் புகைப்பழக்கத்தில் இருந்து முழுமையாகf விடுபட முடியாதவர்கள் இ-சிகிரெட்டை பெரும்பாலும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரதம் இருந்தால் புற்றுநோய் குணமாகுமா? அண்ணாமலையை கலாய்க்கும் மருத்துவர்கள்..!

பகுதி நேர ஆசியர்களின் ஊதியம் 15 ஆயிரமாக உயர்வு!.. அன்பில் மகேஷ் அறிவிப்பு...

முன்பதிவில்லா டிக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு 3% தள்ளுபடி.. ஆனால் இதை செய்ய வேண்டும்..!

ஈரான் மக்களே!.. அடிக்கறவன் பேர நோட் பண்ணி வச்சிக்கோங்க!.. அமெரிக்க அதிபர் ஆவேசம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments