Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட்: போட்டியிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (11:35 IST)
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அவர்களது அணி சென்னை வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு காஷ்மீரில் இருந்து புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏந்தி வந்து, இந்தியா அதை அரசியலாக்கியுள்ளது. சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறுவேன்,” என்று கூறியுள்ளார்.

வியாழனன்று, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இந்தியா வந்திருந்தாலும், அதில் பங்கேற்க வேண்டாம் என திடீரென முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது," என்று கூறினார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் இதில் பாகிஸ்தான் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments